Monday, October 17, 2011

தோகை மயில் இவள் மீது காதலை நான் பொழிவேனோ?



தோகை மயில்தான் இவளோ
என் காலம் முழுதும் வருவாளோ
வானம் மழையைப் பொழிந்தாலும்
இவள் காதல் மழையைப் பொழிவாளோ

என் கண்ணில் மின்னும் தாரகை
என் நெஞ்சில் நிற்கும் தேவதை
நீயே எந்தன் புன்னகை
நீ இல்லை என்றால் வாழ்வில்லை
   
காதல் என்னும் கத்தி முனையில்
ஊசலாடுதடி
என்னுயிர் ஊசலாடுதடி
நேசம் என்னும் கரங்கள் கொடுத்தால்
காதல் வாழுமடி எந்தன்
காதல் வாழுமடி

காதல் என்னும் ஊரிலே
நான் உன்னைப் பாடும் பாடகன்
உயிர் வாழும் காலம் யாவிலும்
நான் என்றும் உந்தன் யாசகன்
   
காதல் கொண்ட காளையர்க்கு
இன்பம் இல்லையடி
என் அன்பே
இன்பம் இல்லையடி
நீயும் என்னைச் சேர்த்துக் கொண்டால்
துன்பம் இல்லையடி
என் வாழ்வில்
துன்பம் இல்லையடி

வானம் எங்குமுன் பூமுகம்
பூமி எங்குமுன் கால்தடம்

வாழ்க்கை தீர்ந்து போயினும்
என் காதல் மட்டும் வாழ்ந்திடும்
   
என் கண்ணில் மின்னும் தாரகை
என் நெஞ்சில் நிற்கும் தேவதை
நீயே எந்தன் புன்னகை
நீ இல்லை என்றால் வாழ்வில்லை...........