Friday, January 20, 2012

தேரோடு வந்த தேவதை...




காதலீ...........

அந்தத் தேர்த்திருவிழாவில்
உன்னையும் தேரையும் - என்னால்
அடையாளம் கண்டுகொள்ளவே
முடியவில்லையடி

ஆனாலும்
உன் சலங்கைச் சத்தம்தான்
அடையாளம் காட்டியது.
உன்னை எனக்கு

பின்னே.....
எந்த தேர் தான்
சலங்கை கட்டி  உலாவரும்?

சகி!
அன்று போலவே
இன்னுமொரு முறை
என் முன் பவனி வா!
இல்லை........கனவுகளிலாவது
அப்படி வந்து போ

சே!
எப்படி முடியும்?
கண்கள் தூங்கினால்தானே
கனவுகள் வருவதற்கு
இவன் தான் 
தூக்கத்தைத் தொலைத்தவன் ஆயிற்றே

பரவாயில்லை
அணுவிலும் சிறிய கருவையும்
பிரிக்கும் சக்தி கொண்டவளே
என் திறந்த விழிகளுக்குள்ளே
அப்படியே வந்து உலாவு
தற்காலிக மகிழ்ச்சியாவது
என் மனம் கொண்டாடட்டும்
 

3 comments:

சசிகலா said...

தற்காலிக மகிழ்ச்சியாவது
என் மனம் கொண்டாடட்டும்
நிரந்தர மகிழிச்சிக்கு வழி வரும் கவலை வேண்டாம் நண்பரே அருமை

sathees said...

கவிதை அருமை.
தேர்த்திருவிழாவுக்குப் போனாமா தேரைப் பார்த்தோமா
சாமி கும்பிட்டோமா என்றில்லாமல்
என்ன விளையாட்டு இது?

கல்லாறு சைத்தன்யா said...

உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...........

என்றும் அன்புடன் உங்கள் ---கல்லாறு சைத்தன்யா (தங்கராஜா காண்டீபன்)--

Post a Comment