Thursday, March 8, 2012

என்னையும் ஏதாவது ஒன்றாய்...






உன்.....மின்னல் விழிகளின் வழியே
என் இதயத்தில்
இடியை இறக்கிய
ஆழகிய அரக்கி நீ...

அன்று நீ – என்
இதயத்தில் அறைந்த வார்த்தைகள்
எனக்கு வேதனை கொடுப்பினும்
இன்னும் என் மனதினில்
பசுமையான நினைவுகளாய்...

இருந்தும் என் மனதிற்குள்
ஏதேதோ ஆசைகள் பல...

உன் பூவிதழ்களில் தவழ்ந்திடும்
புன்னகையாய் இருக்கக்கூடாதா....... நான்?
உன் விழிகளை மூடும்.....
இமைகளாக இருக்கக்கூடாதா....... நான்?
உன் உடல்தனைத் தழுவிடும்
நூல் உடையென இருக்கக்கூடாதா....... நான்?

உன்னை காணதபோது – நான் என்
மனதிற்குள் எடுக்கும் உறுதியெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
தவிடு பொடியாய்...

தறி கெட்ட மனதிற்கு
தாள்பாள் போட்டா தடுத்துவிடமுடியும்?
என் மனமோ....... நித்தமும் அலைவதோ
உன் தாழ்கள் தேடித்தானே

அடியே!
என் மனதைச் சிதறடித்த
அழகிய அரக்கியே!

நீ..... தனியே எங்கும்
நடக்கும் போதெல்லாம் - என்
இதயம் துடியாய்த் துடிக்கிறது

இனியாவது...
என்னையும் உன்னோடு கூட்டிச்செல்
நீ போகும் இடம் எல்லாம்
கூடவே போட்டுச் செல்லும்
பாதணியைப் போல
என்னையும்.....
ஏதாவது ஒன்றாய்.






No comments:

Post a Comment