அனல் தகிக்கும்
பாலை வனத்தில் கூட
ஒருமுறையேனும்...
வெள்ளம் பாய்வதுண்டு
பிரிய சகி....
நீ உன்
நெஞ்சுக் கூட்டுக்குள்
அக்கினிக் குஞ்சுகளையா
அடைகாத்து வைத்திருக்கின்றாய்?
உன்னை
நினைக்கும் போதெல்லாம்
நான் வெந்து விடுகின்றேனே
உன்னை
நெருங்கும் போதெல்லாம்
பனிக்கட்டியாய் உருகிவிடுகின்றேனே
No comments:
Post a Comment