Thursday, March 29, 2012

எப்போதும் எனக்குள்தான் நீ...





வழுக்குப்பாதையில்
எண்ணெய் பூசிக்கொண்டு
ஏற முயற்சி செய்யும்
முடவன் போல
மீண்டும் மீண்டும்
உன் நினைப்பில் நான்



உன்னை நினைக்கும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும்
என் இதயத்தின் வழியே
ஒரு திராவகம் வழிந்தோடிய படியே


நீயோ

தொடமுடியாத தொலை தூரத்தில்
ஒரு புள்ளியாய்
நானோ
இங்கே சிறு பூச்சியமாய்

உலகமே ஒரு பூச்சியம் தானே
பூச்சியத்தில் தானே எல்லாமும் அடக்கம்
ஆதலால் இல்லை பாதகம்
எப்போதும்
எனக்குள்தான் நீ.


No comments:

Post a Comment