Wednesday, May 2, 2012

மாறுபாடு






நீ
குறிஞ்சிப்பூ
எப்போதாவது இருந்துவிட்டுத்தான்
மலர்வாய்
நானோ
கொத்தவரங்காய் - உன்
விழிவீச்சுத் தாங்கமுடியாமல்
தினம் தினம்
தள்ளாடிக்கொண்டிருக்கிறேன்

நீ வண்ண நிலவு
நான் அமாவாசை
நீ வரும்போது நான் இருப்பதில்லை
நான் இருக்கும்போதோ
நீயோ வருவதில்லை

நீ வெயில்
நான் பனி
நீ இருக்கும்போது நான் வருவதில்லை
நீ வந்தாலோ
நான் எங்கோ
காணாமல் போய்வடுகின்றேன்

நீ மின்னல்
நான் இடி
உன் நினைப்பு – என்
இதயத்தை உரசும்போதுதான்
நீ வருவதாகவும்
நான் இருப்பதாகவும்
உணர்ந்துகொள்கின்றேன்

ஆனால்............
நீ மின்னல்
பளிச்சென்று தெரிகின்றாய்
நானே......
வெறும் சப்தம்
உனக்கேனோ – என்றுமே
என்னைத் தெரிவதில்லை

2 comments:

சசிகலா said...

உனக்கேனோ – என்றுமே
என்னைத் தெரிவதில்லை


ரசிக்கும் படி அமைந்த வரிகள் அழகு .

கல்லாறு சைத்தன்யா said...

நன்றி சகோதரி.
யதார்த்தமான வாழ்க்கை
தந்த வலிகள்.
வாழ்க்கையே
யதார்தமாய் அமைந்ததால்
வந்த வரிகள் அவை.

Post a Comment