Saturday, September 17, 2016

ஒருமுறையேனும் சிந்தனை செய்யடி



என் ....
தொலைபேசி
சினுங்கும் போதெல்லாம்,
இதயம் படபடவென்று
அடித்துக்கொள்கிறதடி.
இது..
உன்னிடம் இருந்து வரும்
அழைப்பாக இருக்கக்கூடாதா
என்னும் ஏக்கம் எனக்கு.
நீ...
எப்போது எடுப்பாய்
எனக்கான அழைப்பை.
அலைக்கழிகிறது இளமனது.
என் ஒவ்வொரு கணமும்
உந்தன்...செவ்விதழ்
திறந்து பேசும் - அந்த
ஒற்றை வரிக்காய்ச்
செவி வழி பார்த்து
ஒற்றைக் காலில்
தவமாய்த் தவமிருக்கிறது
என் மனது.
உன் .....
மந்திரப் புன்னகை காண
இமைக்க மறந்து
தவியாய்த் தவிக்கிறதென் விழிகள்.
காதலி....!
என்னை நிந்தனை செய்யாமல்
ஒருமுறையேனும்
சிந்தனை செய்யடி..
அப்போது உனக்குப் புரியும்
உன் சித்தம் முழுதும்
நான் மட்டும்தான்
நிறைந்திருப்பேன் என்பது.....

****----****----****----****----****----****----****
< கல்லாறு சைத்தன்யா>
     ~ பெரியகல்லாறு ~

2 comments:

Post a Comment