Monday, September 26, 2016

இறுதி யாத்திரை


என் காதலி ...!
நான் என்னவோ...
உனக்காக எழுதப்பட்ட
கடிதம் தான் - ஏனோ ..
உன் வாசல் கதவுகளை
தட்டுகின்ற போதெல்லாம்
உன்னால் ..........
திருப்பியனுப்பப்பட்டு...
மீண்டும் மீண்டும்
அச்சடிக்கப்பட்டு ...
கிழிந்து போன
காகிதம் நான்.
இருந்தும் ...
கிழிந்து போன நிலையிலும்
இந்தத் திருமுகம் - உந்தன்
மதிமுகம் காண
ஏங்குகின்ற போதெல்லாம்
ஏன் என் இனியவளே !
மறுதலிக்கிறாய் .
கண்மணி!
இனியும் என்னில்
படிப்பதற்கு ..
வார்த்தைகள் இல்லைதான்.
ஆனாலும் ...
மரணப் பாதையிலும்
உந்தன் கைகள் பட்டு
கசக்கி வீசப்படத்தான்
ஆசைப்படுகிறேனடி.
உன் மனதில்
எனக்கு....
இடம் இல்லையாயினும்
உன் கைகள் தீண்டிய
திருப்தியிலாவது
இவ் ஆத்மா
இறுதி யாத்திரை
போகட்டும்.

                                   ( முற்றும் )
கல்லாறு சைத்தன்யா.
                                                          ........................................

No comments:

Post a Comment