Monday, November 14, 2016

எப்படி முடியும்?


காதலி!
ஒற்றை வரியில்
சொல்லிவிட்டாய்.....
" நீ என்னை..
நேசித்தது உண்மையானால்
பேசாதே என்னிடத்தில்"
என்று.
பைத்தியகாரி....!
ஒரு வாழ்த்துக் கூடச்
சொல்வதற்கு
வழியின்றிச் செய்துவிட்டாயே.
ஏனடி.....?
அமலைப் பெண்ணே!
எப்படி முடியுமடி?
உன்னை...உண்மையாய்
நேசித்த என்னால்
ஊமையாய் இருப்பதற்கு.